ஜோக்கர் திரைப்படத்தின் வாயிலாக தமிழில் கதா நாயகியாக ரம்யா பாண்டியன் அறிமுகம் ஆகினார். இதையடுத்து இவர் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இந்த நிலையில் அண்மைகாலமாக ரம்யா பாண்டியன் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவிடுகிறார்.

இந்த நிலையில் மஞ்சள் நிற புடவையில் அவர் கோயிலுக்கு சென்ற புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் அவர் கோயில் கோபுரம் அருகே இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில், அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர். ’வெள்ளிக்கிழமை மாலை முழுவதும் பாசிட்டிவ்’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.