அமைச்சர் உதயநிதிக்கு எதிராக 1.10 கோடி நஷ்ட ஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்து உள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் அவர் தெரிவித்துள்ளார். சமாதானம் தொடர்பாக உதயநிதி வெளியிட்ட அறிக்கையில் தன்னை விமர்சித்து இருந்ததாக இபிஎஸ் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கொடநாடு வழக்கில் இருந்து தப்பிக்க இபிஎஸ் சனாதனத்தை ஆதரிப்பதாக உதயநிதி அறிக்கையில் வெளியிட்டதற்கு எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.