நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உண்டியலில் செலுத்திய காணிக்கையால் அர்த்தநாரீஸ்வரர் சன்னிதிக்கு எதிரில் உள்ள 2-ம் எண் உண்டியல் நிரம்பியது. இந்நிலையில் கோவில்களில் உள்ள 11 உண்டியல்கள் திறந்து என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று உண்டியல் திறந்து என்னும் பணி தொடங்கியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இளையராஜா மற்றும் ரமணி காந்தன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டது.

இந்த உண்டியல் காணிக்கைகளை என்னும் பணியில் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தன்னார்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர். மீதமுள்ள ஏழு உண்டியல்கள் திறந்து என்னும் பணி இன்று தொடரும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் உண்டியல் என்னும் பணியை புதிதாக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர்.