பீகார் மாநிலத்தில் போத்கயா என்ற பகுதி அமைந்துள்ளது. கடந்த 24-ஆம் தேதி போத்கயா காவல் நிலையப் பகுதியில் உள்ள பண்ணை அருகே 10 வயது சிறுமி தனியாக நடந்து சென்றுள்ளார். இந்த சிறுமியை 3 சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து சிறுமி தன் பெற்றோர்களிடம் கூறி கதறி அழுத்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 3 சிறுவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் 10 வயது சிறுமியை 3 சிறுவர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.