நம்முடைய வீட்டில் துணி துவைப்பதற்கு மட்டுமல்லாமல் பாத்திரம் கழுவுவதற்கும் சோப்பு மற்றும் திரவங்களை பயன்படுத்துகிறோம். இதில் சில ரசாயனங்கள் இருப்பதால் அலர்ஜி மற்றும் சில நோய்களை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாத்திரங்களை எப்படி சுத்தம் செய்வது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பாத்திரங்களை முதலில் சூடான நீரில் கழுவி விட்டு சிறிது பேக்கிங் சோடாவை பாத்திரங்கள் மீது தெளித்து ஸ்க்ரப்பர் மூலம் தேய்த்து மீண்டும் வெந்நீரில் கழுவி எடுக்கவும்.

ஒரு கப் வெந்நீர், இரண்டு ஸ்பூன் உப்பு மற்றும் ஒரு எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை கலந்து பாத்திரத்தை தேய்த்தால் பளபளக்கும்.

பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட சாம்பலை பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தலாம்.

பாத்திரங்களில் உள்ள கிரீஸ் அகற்றுவதற்கு கஞ்சி தண்ணீரை பயன்படுத்தலாம். இதில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சிட்ரிக் அமிலம் பாத்திரத்தை நன்றாக சுத்தம் செய்யும். கஞ்சி தண்ணீரில் பாத்திரத்தை 30 நிமிடம் ஊற வைத்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

ஒரு கப் தண்ணீரில் நான்கு அல்லது ஐந்து ஸ்பூன் வினிகர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி அதனை பாத்திரங்கள் மீது தெளித்து சிறிது நேரம் கழித்து பாத்திரங்களை கழுவினால் பாத்திரம் பளபளக்கும்.