தற்போதைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் அனைவர் வீட்டிலும் உள்ளது. வீட்டில் காய்கறி முதல் சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் தவறு. எதையெல்லாம் பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தர்பூசணி, கிர்ணி பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பிரெட்டை பிரிட்ஜில் வைப்பதால் அதன் பிரெஸ் தன்மை போய்விடும். வறண்டு விடும். வெங்காயத்தை காற்றோட்டமான இடத்தில் அறையின் வெப்ப நிலையில் தான் வைக்க வேண்டும். அதனை ஃப்ரிட்ஜில் வைப்பது நல்லதல்ல. அதுமட்டுமன்றி ஃப்ரிட்ஜை சுத்தமாக பராமரிக்க வில்லை என்றால் துர்நாற்றம் வீசும். எனவே மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பிரிட்ஜில் பனிக்கட்டியாக உறைந்து இருக்கும் கட்டிகளை வாரம் ஒருமுறை அகற்ற வேண்டும். இதுதவிர எலுமிச்சை சாறில் நீர் கலந்து சுத்தம் செய்யலாம். அழுகிய காய்கறிகள் வாடை வந்தால் பாதி எலுமிச்சை பழத்தை வைத்தால் சிறிது நேரத்தில் நாற்றம் போய்விடும்.