இந்திய மல்யுத்த வீரர்கள் பாலியல் புகாருக்கு எதிராக நேற்று புதிய நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டிற்கே பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? குற்றம் சாட்டப்பட்டிருக்கும் பிரிட்ஜ் பூஷன் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் நீதி கோருபவர்களை ஒடுக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு வன்மையான கண்டனங்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.