தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கலந்தாய்வு இன்று முதல் மே மாதம் 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பொது கலந்தாய்வு ஜூன் 1 முதல் 10ஆம் தேதி வரையும் இரண்டாம் கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20ஆம் தேதி வரையும் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மே 22ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்ததில் தகுதி பெற்ற மாணவர்களுக்கான தலவரிசை பட்டியலை கல்லூரி கல்வி இயக்குனராகம் அண்மையில் வெளியிட்ட நிலையில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்குகிறது.