உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆண் நாய்க்கும் பெண் நாய்க்கும் திருமணம் செய்து வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்திய பாரம்பரிய முறைப்படி ஆண் நாயான டாமிக்கும் பெண் நாயான ஜெய்லிக்கும் திருமண சடங்குகளை அதன் உரிமையாளர் செய்துள்ளார். இந்த இரண்டு நாய்களின் திருமணம் மகர சங்கராந்தி தினமான ஜனவரி 14ஆம் தேதி நிச்சயக்கப்பட்டது.

இதுவரை தொடர்ந்து மணமக்களுக்கு மாலை அணிவித்து திலகம் வைத்து இரண்டு உரிமையாளர்களும் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். இந்த திருமண விழாவிற்கு வந்தவர்கள் நாய்களுக்கு திருமணம் முடிந்த பிறகு ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.