வருகிற 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தினசரி கால நிலவரம், தேர்தல் பிரச்சாரம் பற்றி கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினரிடம் தொலைபேசி மூலமாக கேட்டறிந்து வருகிறார். முன்னதாக ஈரோடு கிழக்கில்  பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தார். இதனை முன்னிட்டு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரச்சார சுற்றுப்பயணம் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று  ஒரே நாள் மட்டும் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார். சென்னையில் இருந்து நேற்று மாலை விமான மூலம் கோவை சென்றார் அங்கிருந்து கார் மூலமாக ஈரோடு சென்று சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். இதனையடுத்து அங்கு  கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களை சந்தித்து கள நிலவரங்களை கேட்டு அறிகிறார். மறுநாள் சனிக்கிழமை காலை வீதி வீதியாக சென்று கட்சி கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸின் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் பிரச்சார திட்டம்

*நாள்: பிப்ரவரி 25 சனிக்கிழமை

*புறப்பாடு: காலையில் சக்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்படுகிறார்.

*காலை 9: மணி சம்பத் நகர், பாரதி தியேட்டர், பெரிய வலசு பஸ் நிலையம், மெட்ராஸ் ஹோட்டல்,  சக்தி ரோடு, மஸ்ஜித் வீதி போன்ற இடங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

*காலை 10 மணி: காந்தி சிலை, வழி கே என் கே ரோடு, மூலப்பட்டறை பவானி ரோடு.

*காலை 11 மணி: அக்ரஹாரம், வழி பூம்புகார் நகர், வில்லரசம்பட்டி, காந்திநகர், சக்தி சுகர்ஸ்

*மாலை 3 மணி: சக்தி சுகர்ஸ், அம்மு மெஸ் பிரிவு, சம்பத் நகர், சின்னமுத்து வீதி, முனிசிபல் காலனி.

*மாலை 3 45 மணி: மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா, பெரியார் நகர்.

இதனையடுத்து சத்தி சுகர்ஸ் விருந்தினர் மாளிகைக்கு திரும்பி சிறிது நேரம் அங்கு ஓய்வெடுத்துவிட்டு அதன் பின் கோவைக்கு வருகை புரிந்து விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார். சுற்று பயணத்தில் செய்யப்பட்ட மாற்றத்திற்கான காரணங்கள் பற்றி தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் முக்கிய அரசு பணி காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நிச்சயம் வெற்றி பெற்று விடுவோம் என்று நம்பிக்கையை ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தொடர்ந்து உறுதி அளித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.