ஈரானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள பாகிஸ்தான் எல்லையில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதில் ஈரானியர்கள் அல்லாத வெளிநாட்டினர் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஈரானுக்கான பாகிஸ்தான் தூதர் உயிரிழந்த ஒன்பது பேரும் பாகிஸ்தானியர்கள் என அடையாளம் கூறியுள்ளார்.

சிர்கான் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்று கூறப்படுகிறது.