இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக போர் நீடித்து வந்த நிலையில் நான்கு நாட்கள் போர் இடைநிறுத்தத்திற்கு இரண்டு தரப்பினரும் முன் வந்துள்ளனர். இதன் மூலம் இரண்டு தரப்பினரும் தங்களிடம் இருக்கும் பணய கைதிகள் சிலரை விடுவிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதன்படி ஹமாஸ் அமைப்பினர் முதல் கட்டமாக 24 பணய கைதிகளை விடுதலை செய்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேல் தரப்பில் இருந்து 39 பாலஸ்தீனியர்கள் விடுவிக்கப்பட்டனர். அதன்படி 24 பாலஸ்தீனிய பெண்களும் 15 வாலிபர்களும் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.