பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 65 வயதான திலாவர் கான் என்பவர் எழுதப் படிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளார்.

இவர் வகுப்பறையில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து கல்வி கற்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் திலாவர் கானுக்கு உற்சாகமூட்டும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.