நியூயார்க்கில் இருந்து தென்கொரியாவிற்கு சென்ற கொரியன் விமானத்தில் பயணித்த 26 வயது பெண் ஒருவர் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது எமர்ஜென்சி கதவை திறக்க முயற்சித்துள்ளார். பின்னர் விமான பணிப்பெண்களால் தடுத்து நிறுத்தப்பட்ட அவர் 10 மணி நேர விமான பயணத்தில் பலமுறை இதுபோன்று ஆபத்தான செயலில் ஈடுபட முயற்சித்துள்ளார்.

இதனால் பயணிகள் அச்சத்துடன் பயணித்துள்ளனர் விமானம் தென்கொரியாவில் தரையிறங்கியதும் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்ட போது அவர் போதைப்பொருள் உபயோகப்படுத்தியது கண்டறியப்பட்டது.