அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் சவான்னா கிரிகர் (32) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு கெய்தன் (3) என்ற மகன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரு பூங்காவுக்கு சென்ற நிலையில் திடீரென கிரிகர் தன் மகனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கிரிகர் தன்னுடைய முன்னாள் கணவர் மீது கோபத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.

அவர் சம்பவ நாளில் தன்னுடைய முன்னாள் கணவர் வீட்டிற்கு சென்றபோது அவர் அங்கு இல்லை. இதனால் ஆத்திரத்தில் அவர் அங்கிருந்த பொருட்களை அடித்து  நொறுக்கியதோடு  திருமண புகைப்படங்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு வந்த கிரிகர் தன் கணவருக்கு இனி உங்கள் வாழ்க்கையில் எதுவுமே இருக்காது என கூறி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதோடு தன் மகனை வைத்து தந்தைக்கு குட்பை சொல்லு  எனவும் ஒரு வீடியோ அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து கிரிகர் தன் மகனை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.