தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்தில் இருந்து வந்த மல்லேசம் என்பவர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருடைய சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.