உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணை கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், முதலிரவுக்காக தயாரான பாதல், வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நிக்கி மாயமாகியுள்ளார். மேலும், வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்கமும் காணாமல் போனது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பாதல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், பணம் மற்றும் நகையுடன் தப்பிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நிக்கி இதுபோல் பலரை ஏமாற்றியது தெரியவந்தது.