பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் தேடப்படும் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதியிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், மோட்டார் சைக்கிள் போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது தவறுதலாக குறுக்கே வந்த இரண்டு பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.