இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை நிறுத்த சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தது பாலஸ்தீனம் அரசு. காசா நகரில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறும் பாலஸ்தீன அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. பாலஸ்தீன மக்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைப்பதை சர்வதேச நாடுகள் உறுதி செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக அவசர நிலையை பிரகடனப்படுத்தியது பாலஸ்தீன அரசு. அரசு தூதரக ஊழியர்களுக்கு விடுமுறை ரத்து, 24 மணி நேரமும் பணியாற்றவும் பாலஸ்தீன அரசு உத்தரவிட்டுள்ளது.