இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உச்சக்கட்ட போர் சூழல் நிலவி வரும் நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 900க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த போரில் வழக்கமான ராணுவத்துடன் இணைந்து 3 லட்சம் ரிசர்வ் ராணுவத்தை இஸ்ரேல் நிறுத்தியது.

இதில் 95 வயதான எஸ்ரா யாச்சின் ரிசர்வ் ராணுவத்தில் சேர்ந்தார். இஸ்ரேல் தேசம் உருவாவதற்கு முன், அரேபியர்களுக்கு எதிராக பிரிட்டன் போரில் கலந்து கொண்டார். தற்போது துப்பாக்கியை பிடித்து ராணுவத்தின் மன உறுதியை உயர்த்தி வருகிறார்.