மத்திய பிரதேசம் மாநிலத்தில் உணவகம் ஒன்றில் 18 வயது இளைஞர் ஒருவர் வழுக்கி விழுந்து மரணம் அடைந்த காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வாழ்க்கையில் பல நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் இளம் வயதில் உள்ள வாலிபர்கள் நொடியில் மரணிக்கும் சோகமான சம்பவங்கள் அதிகமாகவே நடந்து வருகிறது.

அந்தவகையில் 18 வயது இளைஞர் ஒருவர் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் மேஜை ஒன்றை தூக்கி செல்லும் பொழுது கால் வழுக்கி  கீழே விழுந்துள்ளார். கீழே விழுந்த உடனே மயங்கிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளதாக கூறியுள்ளனர்.