சவுதி அரேபியாவில் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி உழைத்துவிட்டு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் தாயகம் திரும்பிய பங்களாதேஷை சேர்ந்த 78 தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டதைக் கண்டு தொழிலாளர்கள் நிலைகுலைந்து போயினர். தங்கள் வாழ்நாள் சேமிப்பை இப்படிப் பறிகொடுத்த வேதனையில், அவர்கள் விமான நிலையத்திலேயே கதறி அழுத காட்சி காண்போரை ரணமாக்கியுள்ளது.
78 Bangladeshi workers who had been working in Saudi Arabia returned home on Ethiopian Airlines, transiting through Ethiopia before heading to Bangladesh.
When they arrived at Shah Jalal Airport, they were shocked to discover that some of their luggage locks had been broken and… pic.twitter.com/xzUa9TkTes
— Global Folder (@Global_Folder) April 19, 2026
பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய விமான நிறுவனம், இதில் காட்டிய மெத்தனம் கடும் கண்டனத்திற்குரியது. பல நாட்டு எல்லைகளைத் தாண்டி வரும் பயணத்தில், உழைப்பாளர்களின் உடைமைகள் திருடப்பட்டது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் பாதுகாப்புக் குறைபாட்டையே காட்டுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உரிய நீதியும் நஷ்டஈடும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
