விரைவில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதாவது இனிவரும் தேர்தல்களில் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வசதி 85 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ள நிலையில் முன்னதாக 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் வயது வரம்பை உயர்த்தியுள்ளது.