இந்தியாவில் பொது விடுமுறை நாட்களில் வங்கிகள் அனைத்தும் மூடப்படும். சில மாநிலங்களில் குறிப்பிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி வருகின்ற மார்ச் எட்டாம் தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 25ஆம் தேதி ஹோலி மற்றும் மார்ச் 29ஆம் தேதி புனித வெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 22 பீகார் திவாஸ் மற்றும் மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது சனிக்கிழமை மார்ச் ஒன்பதாம் தேதி, நான்காவது சனிக்கிழமை மார்ச் 23ஆம் தேதி மற்றும் மார்ச் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறையாகும். எனவே வங்கி விடுமுறைகளுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் வங்கி சார்ந்த வேலைகளை முன்னரே முடித்துக் கொள்வது நல்லது.