சென்னை பள்ளிக்கரணியைச் சேர்ந்த பிரவீன் என்பவர் ஷர்மிளா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பிரவீன் ஆணவக் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவி ஷர்மிளா கணவரின் கொலைக்கு தக்க நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலைக்கு முன் எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனது காதல் கணவர் பிரவீனுடன் வாழ ஆசையாக இருந்தேன். ஆனால், அவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நானும் அவன் கூடவே போறேன் என உருக்கமாக கூறியுள்ள ஷர்மிளா, தனது தற்கொலைக்கு பெற்றோரும், சகோதரர்களுமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.