இந்தியாவில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தங்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட கணக்கு மூலம் மட்டுமே இனி 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பளம் விநியோகிக்கப்படும். ஆதார் கார்டு இணைக்கவில்லை என்றால் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படாது என அரசு தெரிவித்துள்ளது. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.