இந்தியாவில் பழைய 100 ரூபாய் நோட்டுகள் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் அதற்குள் அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

ஆனால் ரிசர்வ் வங்கி இந்த தகவலை முழுமையாக மறுத்துள்ளது. இது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் பழைய 100 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. எனவே பழைய 100 ரூபாய் நோட்டுகள் வழக்கம் போல செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.