தமிழகத்தைப் போல தெலுங்கானாவிலும் தகுதியான மக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு இல்லாதவர்கள் உடனடியாக புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் படி அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.  இந்த நிலையில் அரசு புதிய ரேஷன் கார்டை பெறுவதற்கு விண்ணப்ப படிவத்தை வெளியிட்டுள்ளது. அதாவது குடும்ப தலைவரின் பெயர், வயது, பாலினம், ஜாதி, பிறந்த தேதி, ஆதார் அட்டை எண் தொலைபேசி எண் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

இதுபோக வீட்டு முகவரி எண், வார்டு எண், மாவட்டம் ஆகிவற்றையும் நிரப்ப வேண்டும். அடுத்ததாக விண்ணப்ப படிவத்தின் இரண்டாம் தாளில் பிரஜாபாலனா ரேஷன் கார்டு விண்ணப்ப ரசீது பெயர் இருக்கும். அதையும் நிரப்பிய பிறகு அதிகாரிகள் உங்களுடைய விண்ணப்பம் ஆய்வு செய்யப்பட்டு தகுதி இருந்தால் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் நபர்கள் விவசாயி பரவசா, கிரக ஜோதி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்.