மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளித்தபின், இப்போது மீண்டும் விதிகளில் பெரிய மாற்றத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக இப்போது அரசு ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இந்த விதிகளை நீங்கள் கவனிக்கவில்லை எனில், பெறும் ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

பணி நேரத்தின்போது அலட்சியமாக இருந்தால் பணி ஓய்வுபெற்ற பிறகு அவருடைய ஓய்வூதியம் மற்றும் கிராஜூவிட்டியானது நிறுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு மத்திய ஊழியர்களுக்கு பொருந்தும். எனினும் ஒரு சில மாநிலங்களும் இதை நடைமுறைபடுத்தலாம்.