மருத்துவமனை என்பது உயிர் காக்கும் இடம், ஆனால் அங்கே ஒரு முதியவருக்கு நேர்ந்த கொடுமை பார்ப்பவர் நெஞ்சை உறைய வைக்கிறது. ஹரியானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில், சிசிடிவி கேமராவில் தனது முகம் தெரியக்கூடாது என்பதற்காகத் திரையை இழுத்து மூடிவிட்டு, ஒரு முதிய நோயாளிக்கு அடுக்கடுக்கான குத்துக்களை ஒரு நபர் கொடுத்துள்ளார். அந்த நோயாளி முதியவர் என்றும் பாராமல், அவர் மார்பில் தனது முழங்காயால் குத்தித் தாக்கும் காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதாபிமானமற்ற இந்தச் செயலைச் செய்தது ஒரு மருத்துவர் என்று முதலில் கூறப்பட்டாலும், அவர் ஒரு வார்டு பாய் (Ward Boy) என்பதும், வீடியோ வைரலானதும் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
ایک نگرانی کیمرے نے وہ لمحہ ریکارڈ کیا جب بھارتی ریاست ہریانہ کے ایک اسپتال میں ایک ڈاکٹر نے کیمرے کی نظر سے بچنے کے لیے پردے بند کیے، اور پھر مبینہ طور پر ایک بزرگ مریض کے سینے پر کہنی سے تشدد کیا۔
اس واقعے کی فوٹیج سامنے آنے کے بعد شدید عوامی غم و غصہ پیدا ہوا، اور لوگوں نے… pic.twitter.com/0RwpqpO9rG
— Yamaan Shahid 𝕩 (@realYamaan) April 16, 2026
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்திலேயே இவ்வளவு பெரிய அநீதியா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே சிம்லாவில் 2025-ல் ஒரு மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையே நடந்த மோதலும், அந்த மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டதும் ஒரு கசப்பான முன்னுதாரணமாக இருக்கும் நிலையில், மீண்டும் ஒரு மருத்துவமனையில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்தது பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. “மக்களைக் காப்பாற்ற வேண்டியவர்களே இப்படி கொலைவெறித் தாக்குதல் நடத்தினால் மனிதாபிமானம் எங்கே போவது?” என்றும், இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
