மணிப்பூர் மாநிலத்தில் ஐந்து மாதங்களாக மைதி மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே பயங்கர மோதல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இரண்டு மாணவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் பெல்லட் துப்பாக்கியால் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். பலர் பலத்த காயமடைந்த சோய்பம் என்ற இளைஞர் தலையில் 61 பெல்லட் குண்டுகள் பாய்ந்து உள்ளன. அவரது தலையின்  எக்ஸ்ரே புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.