காரைக்குடியில் பட்டப் பகலில் இளைஞர் ஒருவர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கு ஒன்றிற்காக அவர் காரைக்குடி போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இளைஞரை கொலை செய்துள்ளனர்.

அதாவது, தனது கூட்டாளிகளுடன் சென்ற மதுரையை சேர்ந்த வினீத் என்பவரை வழிமறித்து மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. சம்பவ இடத்திலிருந்த வினீத்தின் கூட்டாளிகள் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு பட்டப் பகலில் நடந்த பயங்கர சம்பவத்தால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.