சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனை தொடர்ந்து  நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை பற்றிய மருத்துவ அறிக்கை குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவருகிறார்கள். அதன்படி ESI,  எய்ம்ஸ் மருத்துவர்களிடம் செந்தில் பாலாஜி உடல்நிலை பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் மருத்துவர்கள் தரும் தகவலையடுத்து செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.