கேரள மாநிலம் திருச்சூர் அருகே கருவண்ணூரில் ஆற்றில் குதித்து 26 வயது பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூரில் உள்ள அஸ்வினி மருத்துவமனை அருகே உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வந்த ஆயுர்வேத மருத்துவரான டிரேசி வர்கீஸ் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

இவர் பாலத்தின் நடுப்பகுதியை நோக்கி நடந்து தனது காலணிகளை அகற்றி விட்டு ஆற்றில் குதித்ததாக நேரில் கண்ட சிலர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார் அவருடைய சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.