திமுக கூட்டணிக்கான தொகுதி பங்கேட்டில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணையும் பட்சத்தில் கோவை மற்றும் தென் சென்னை தொகுதிகளை கேட்க மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். ஆனால் கோவையில் மக்கள் நீதிமன்ற மய்யத்திலிருந்து பிரிந்து சென்ற மகேந்திரனும், தென் சென்னையில் தமிழச்சி தங்கபாண்டியனும் போட்டியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் திமுக தலைமை என்ன செய்வது என்று குழப்பம் அடைந்துள்ளது.