தென்கொரியா இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடகர் சொய் சுங் பாங்(33) நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரின் மரணம் தொடர்பாக விசாரித்த போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறியுள்ளனர். சியோலில் உள்ள யோக்சம்-டாங் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் பாடகர் இறந்து கிடந்தார் என்று கொரியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக அவர் தனது யூடியூப் சேனலில் ஒரு கடிதத்தை பதிவேற்றினார். அவர் தன்னை காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனக்கு வழங்கிய நன்கொடைகளை திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.