தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து தற்போது உச்சம் தொட்ட நடிகராக வளர்ந்து உள்ளார். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து தற்போது முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றியை அடைந்தது. மேலும் பாடலாசிரியராகவும் உள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பிரபல அரசியல் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்த இளம் நடிகர் ஒருவர் பொறாமைப்பட்டு சிவகார்த்திகேயனின் கரியரையே காலி செய்ய திட்டமிட்டு அடுத்தடுத்த நான்கு படங்களை அவருடைய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க அக்ரிமெண்ட் போட்டுள்ளார். ஆனால் அவர்கள் படம் எடுக்காமல் மற்ற எந்த இயக்குனரின் படங்களிலும் நடிக்க விடாமல் தடுக்க திட்டமிட்டு தான் இப்படி செய்தார்களாம். இந்த விஷயம் சிவகார்த்திகேயனுக்கு பிறகு தெரிய வந்தததையடுத்து இப்படியே அவர்கள் பிடியில் இருந்து தப்பித்து வந்தார் என்று பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.