ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், “தனக்கு பலாப்பழம் சின்னம் கிடைத்தது இறைவனின் செயல்” என்று பேசியுள்ளார். ராமநாதபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், எதிரிகள் தேடி தேடி 6 பன்னீர் செல்வத்தை எனக்கு எதிராக களமிறக்கினார்கள்.

ஆனால் முக்கனிகளில் ஒன்றான, இருப்பதிலேயே பெரிய பழமான ‘பலாப்பழம்’ குலுக்கலில் எனக்கு கிடைத்து இருப்பது அந்த இறைவனின் செயல். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார்” என்று பேசினார்.