இந்த மக்களவைத் தேர்தல் ஊழலை எதிர்ப்போருக்கும், ஊழலை காக்கப் போராடுவோருக்கும் இடையே நடக்கும் தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உ.பி.,யின் மீரட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ‘கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகளின் பணம் திருடப்படுவதை தடுத்திருக்கிறோம். ஊழலுக்கு எதிராக நான் போராடுவதால், சிலர் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். ஊழல்வாதிகளிடம் இருந்து ரூ.17,000 கோடியை மீட்டுள்ளோம்’ என்றார்.