மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட கொளக்குடி கிராமத்தில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவரும், பாஜக வேட்பாளருமான பாரிவேந்தர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், “5 வருடம் கழித்து இப்போதுதான் வருகிறீர்கள்? நீங்கள் சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆனது? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டனர். இதனால் சில நிமிடங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு பாரிவேந்தர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.