தேர்தல் பரப்புரையின் போது 500 ரூபாய் பண கட்டை காட்டிய கரூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் நாதன் வேடசந்தூர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட போது பையில் இருந்து திடீரென நோட்டுக்கட்டுக்களை எடுத்து பொதுமக்களிடம் காட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் அவர் உள்ளிட்ட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது