தமிழகத்தில் 45 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. செய்தி துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் இணை அரசு செயலாளராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தமிழகத்தில் உள்ள 45 காவல்துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபிநபு நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை காவல் ஆணையராக நரேந்திர நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருச்சி மாநகர காவல் ஆணையராக சத்திய பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அரவிந்தன், சரோஜ்குமார் தாக்கூர், மகேஷ் குமார், விக்ரமன் உள்ளிட்ட 9 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  வன்னிய பெருமாள், பிரவீன் குமார், அபிநபு பகலவன், மயில்வாகணன், கல்பனா நாயகர் போன்றோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.