ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசி அவர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறார். மக்களவை உறுப்பினர் ஊதியத்திலிருந்து மாதம் 50 ஆயிரம் ரூபாய் சேர்த்து வைத்திருந்தாலே தாராளமாக தேர்தலுக்கு போதும்.

எனவே அவர் சொல்வது பச்சை பொய் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். திமுக சார்பாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. எனவே வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.