அசாமில் உள்ள இந்த மயோங் கிராமம் பல நூற்றாண்டுகளாக மர்மங்கள் நிறைந்த ஒரு இடமாகவே பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் மக்கள் தலைமுறை தலைமுறையாக பில்லி சூனியம் மற்றும் மாந்திரீகக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
மேலும் பழங்காலத்திலிருந்தே இந்த கிராமத்தில் மந்திரங்கள் மூலம் நோய்களைக் குணப்படுத்துவது, விசித்திரமான மாயாஜாலங்கள் செய்வது போன்ற பல மர்மமான வழிமுறைகள் வழக்கத்தில் உள்ளதாக நம்பப்படுகிறது. இன்றும்கூட இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் மாந்திரீகக் கலைகளை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள்.
