தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த ஜஹாங்கீர் பாஷா மீது நகராட்சிப் பணியாளர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் குதித்தனர். தங்களை இரவு 11 மணி வரை நீண்ட நேரம் கட்டாயப்படுத்தி வேலை வாங்குவதாகக் கூறி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊழியர்கள் அலுவலகத்திலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, மறுநாளும் ஊழியர்கள் தங்களது பணிகளைப் புறக்கணித்துவிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் நகராட்சி நிர்வாகப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

“>

 

ஊழியர்களின் இந்தப் போராட்டத்தை அடுத்து, நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாக இயக்க இயக்குநர் மதுசூதன் ரெட்டி, உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, சர்ச்சையில் சிக்கிய ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை வேறு இடத்திற்கு மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.