இந்தியாவின் பல மாநிலங்களில் தற்கால விலை தொடர்ந்து கிடுகிடுவென உயர்ந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே தக்காளி விலை தொடர்பாக தகராறு ஏற்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. சஞ்சீவ் என்ற நபர் மனைவியை கேட்காமல் இரண்டு தக்காளியை குழம்பில் போட்டு உள்ளார். விலை அதிகமாக இருக்கும்போது தக்காளியை குறைவாக பயன்படுத்த வேண்டியது தானே என மனைவி கணவனிடம் சண்டை போட்டுள்ளார். அதன் பிறகு மகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மனைவியை காணாததால் சஞ்சீவ் போலீசில் புகார் அளித்துள்ளார்.