எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெக்ஸ் ட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவ மாணவர்கள் போராடிய நிலையில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 28ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெறவிருந்த நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறையிடமிருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக நெக்ஸ்ட் செயலாளர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை நெக்ஸ்ட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலை ஏற்று நெக்ஸ்ட் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.