டெல்லியில் வரலாறு காணாத மழை காரணமாக பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளில் யமுனை ஆற்றின் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பள்ளி கல்வித்துறை உத்தரவின் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று மற்றும் நாளை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யமுனை ஆற்றங்கரையில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.