மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அஜித் பவார் மீண்டும் இன்று சந்தித்துள்ளார். நேற்று தனது அணியினருடன் சரத் பவாரை சந்தித்து அஜித் பவார் பேசி இருந்த நிலையில் இன்று மீண்டும் சந்தித்துள்ளார். நேற்றைய தினம் சரத் பவாரிடம் இருந்து ஆசீர்வாதம் வாங்க வந்ததாக அஜித் பவார் ஆதரவாளர் பிரபுல் பட்டேல் கூறியிருந்தார். இந்த சந்திப்பு மகாராஷ்டிரா அரசியரின் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.