மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசியல் சார்பாக ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வு வழங்குவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வருடத்திற்கு 14 நாட்கள் கட்டாயம் விடுமுறைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் முக்கிய பண்டிகை தினங்களில் மூன்று நாட்கள் விருப்பத்தின் பிறகு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமாக சுதந்திர தினம், குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த நாள், புத்தபூர்ணிமா, கிறிஸ்துமஸ், தசரா பண்டிகை, தீபாவளி, புனித வெள்ளி, குருநானக், மகாவீர் ஜெயந்தி, முகரம் முகமது நபி பிறந்தநாள் ஆகிய தனங்களில் கட்டாயமாக விடுமுறை அறிவிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இது மட்டுமின்றி ஹோலி பண்டிகை, ராமநவமி, மகா சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மகரசங்கராந்தி, தேர்த்திருவிழா, ஓணம் பண்டிகை, பொங்கல், ஸ்ரீ பஞ்சமி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மத்திய ஊழியர்கள் விருப்பத்தின் பேரில் மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என  திடீர் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.